மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடப் போவதாக மகிந்த அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தாம் பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும், தொடர்ந்து நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 23 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

குருநாகலவில் மகிந்தவுக்கு அதிக விருப்பு வாக்குகள்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, 423,529 விருப்பு வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நாமல், சஜித்துக்கு அதிக விருப்பு வாக்குகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாமல் ராஜபக்சவும், ஐதேக சார்பில் சஜித் பிரேமதாசவும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இரு மாவட்டங்கள் ஐ.ம.சு.மு. வசமானது – ஒன்றில் கூட்டமைப்பு வெற்றி

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரையில் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, பொலன்னறுவ ஆகிய மூன்று மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மைத்திரியால் வெளியேற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் 13 மத்திய குழு உறுப்பினர்கள்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்ட 13 பேரினது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அஞ்சல் மூல வாக்களிப்பு – மாவட்ட ரீதியான முடிவுகள்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலின்  அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை இரத்தினபுரி, திருகோணமலை, அம்பாந்தோட்டை, காலி,மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து 25 பேரை நீக்கினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரை கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்முறைகள் நடந்தால் வாக்களிப்பு நிறுத்தப்படும் – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

சிறிலங்காவில் இன்று நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்து, வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும்.