மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா அதிபரின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு படுகாயம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான, பிரியந்த சிறிசேன இன்று மாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், பொலன்னறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரியின் தடையை மீறி இரத்தினபுரிக் கூட்டத்தில் குவிந்த சுதந்திரக் கட்சியினர்

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலி்யுறுத்தி, இரத்தினபுரியில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி விதித்திருந்த தடையை மீறி, அந்தக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

மகிந்தவின் மருமகனுக்கு எதிராக அனைத்துலக விசாரணை

உக்ரேனில் உள்ள பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஸ்யாவுக்கான சிறிலங்காவின்  முன்னாள் தூதுவர், உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளது.

இரத்தினபுரி மகிந்த ஆதரவுப் பேரணியில் தடையை மீறுவராம் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் இன்று இரத்தினபுரியில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளன.

காங்கேசன்துறையில் அனைத்துலக உறவுகளுக்கான நிலையம் – கட்டுமானப்பணிகளை தொடர அனுமதி

காங்கேசன்துறையில் கட்டப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அதிபர் மாளிகையின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

சிறிலங்காவின் 234 உள்ளூராட்சி சபைகளினது ஆயுள்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19வது அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 19வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஏப்ரல் 23இற்குப் பின்னர் திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தல் – ரவி கருணாநாயக்க

தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படாது என்றும், திட்டமிட்டபடி, ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவேன் – மகிந்த ராஜபக்ச

தாம் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பலரின் அதிகாரங்களைக் குறைத்த சிறிலங்காவின் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று புதிய அமைச்சர்களுக்கு நியமனங்களை வழங்கிய போது, ஏற்கனவே அமைச்கர்களாக இருந்தவர்களிடம் இருந்து சில பொறுப்புகளை மீள எடுத்துக் கொண்டுள்ளார்.