மைத்திரிபால உள்ளிட்ட 3 அமைச்சர்களை பதவிநீக்கினார் மகிந்த
எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகிய மூன்று அமைச்சர்களுமே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், மைத்திரிபால சிறிசேனவையும், அவருக்கு ஆதரவளிப்போரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நீக்கியுள்ளார்.