சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் காலமானார்
சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், தினகரன் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான எஸ்.தில்லைநாதன் நேற்று காலமானார்.
வீரகேசரி நாளிதழில் தமது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த, எஸ்.தில்லைநாதன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், எவ்எம் 99, சக்தி தொலைக்காட்சி, ஆகிய ஊடகங்களிலும் பணியாற்றியவர்.
அத்துடன் சிறிலங்கா பத்திரிகை சபையிலும், தணிக்கைச் சபையிலும் உறுப்பினராக இருந்தவர்.
மத்துகமவில் வசித்து வந்த அவர், நேற்றுக் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.