சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராடர்களினால் கட்டுப்படுத்தப்படும், விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி ஒன்றை விமானப்படைக்கு கொள்வனவு செய்வது குறித்தே, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகிறது.
S 300 மற்றும் Buk 27 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இதற்கான பரிசீலனையில் உள்ளன.
இந்த ஏவுகணைகளை, விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.
அத்துடன், இவை சில வகை வழிகாட்டல் (cruise) மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை (ballistic) தடுக்கும் திறன் கொண்டவையாகும்.