நீக்கப்படுகிறது அவசரகாலச்சட்டம்
சிறிலங்காவில் நடைமுறையில் இருக்கும் அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியதும், உடனடியாக அவசரகாலச்சட்டத்தை இரத்துச் செய்யும் அரசிதழில் கையெழுத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிறிலங்கா அதிபரின் செயலக வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்ததை அடுத்து, கடந்த மார்ச் 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் சிறிலங்கா அதிபரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிந்திய செய்தி
சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டத்தை நீக்கும் அரசிதழில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளார் என்று அதிபரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி உடனடியாக அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.