உள்ளூராட்சித் தேர்தல் – கருத்து வெளியிட முதலமைச்சர் மறுப்பு
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அனைத்துலக ஊடகம் ஒன்று செவ்வி கண்டுள்ளது.
அந்தச் செவ்வியில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக உங்களிடம் ஏதாவது கணிப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு அவர், ஒன்றுமில்லை எனப் பதிலளித்துள்ளார்.