அமெரிக்காவின் ஏற்றுமதித் தடை – சிறிலங்காவுக்கு ஆபத்து
சிறிலங்காவில் இருந்து கடலுணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதிக்கும் நிலை ஏற்படலாம் என்று சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.
பாரம்பரியமாக கையாளப்படும் மீன்பிடி முறையில் டொன்பின் மீன்கள் அகப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடின், அமெரிக்காவின் கடலுணவு ஏற்றுமதித் தடையை எதிர்கொள்ள நேரிடும்.
டொல்பின்கள் வலைகளில் சிக்குவது மற்றும் கொல்லப்படுவதை தடுப்பதற்கு பொருத்தமான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடின் அமெரிக்காவின் ஏற்றுமதித் தடையை எதிர்கொள்ளக் கூடிய ஆபத்து உருவாகும்.
அனைத்துலக மீன்பிடிச் சட்டத்தின் கீழ் டொல்பின்களை பிடிப்பது, கொல்வது சட்டவிரோதமாகும்.
எனவே, ஏனைய நாடுகளில் டொல்பின்கள் அகப்படுவது கொல்லப்படுவதை தடுப்பதற்குப் பயன்படுத்தும் கருவிகளை, உள்ளூர் மீனவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.