விசாகப்பட்டினத்தில் தொடங்கியது இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி
இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான 5ஆவது கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சிக்கு SLINEX-2017 என்று பெயரிடப்பட்டுள்ளது. SLINEX கூட்டுப் பயிற்சி ஆண்டு தோறும் இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி வரும் 14ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.
இதில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் சயுர, சாகர ஆகிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குச் சென்றுள்ளன.