மேலும்

சுரேஷ் சாலேயின் ரிட் மனுவை விசாரிப்பதா என நவம்பர் 27இல் கட்டளை

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க அனுமதி வழங்குவது பற்றி நவம்பர் 27ஆம் நாள் அறிவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, சுரேஷ் சாலே இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான வாய்மொழி வாதங்களை நேற்று நிறைவு செய்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இதனை அறிவித்துள்ளது.

சாலே சார்பில் முன்னிலையான அதிபர் சட்டவாளர் சஞ்சீவ ஜெயவர்தன, நீண்டவாதங்களுக்குப் பிறகு  தனது பதில் வாதங்களை நேற்று நிறைவு செய்தார்.

தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை ஒக்டோபர் 20-ஆம் நாளுக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் இரண்டு தரப்பினருக்கும் உத்தரவிட்டது.

இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் மீதான தனது தீர்ப்பையும் நவம்பர் 27 ஆம் நாள் வழங்குவதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *