மேலும்

சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்  திறன்பேசி பயன்படுத்த விரைவில் தடை

சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைச் சிறுவர்கள்  திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர்,

12 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும் திறன்பேசி வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும்.

இந்த நடவடிக்கை, அதிகப்படியான திரை நேரம் மற்றும் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் குழந்தைகளைப் பாதுகாப்பதையும், ஆரோக்கியமான குழந்தைப் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *