இந்தியத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு – அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், வடக்கு கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் நிலை குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.