பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலின் பக்க நிகழ்வாக இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோரும், இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சர் அஹத் கான் சீமாவுடனும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புகள், சிறிலங்கா அதன் அண்டை நாடுகளுடன் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுவதாகவும், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் தடையற்ற வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.