மேலும்

நீடிப்புக் கோர வழியில்லை – ஜிஎஸ்பி பிளஸ் க்கு மீள விண்ணப்பிக்க வேண்டும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ்  சலுகைக்கு, சிறிலங்கா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர்,  எக்ஸ் தளத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

“ ஜிஎஸ்பி பிளஸ் சலுகை 2027ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்பதால் சிறிலங்கா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

நான் இருமுறை சரிபார்த்தேன். நீடிப்புக் கோர எந்த வழியும் இல்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் ஆகியன தொடர்பாக, சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்“ என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *