மேலும்

வட, கிழக்கில் 2 1/2 இலட்சம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு – ஒப்புக்கொண்ட சிறிலங்கா

வடக்கு, கிழக்கில், இரண்டரை இலட்சம் ஏக்கர் காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால், அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 250,000 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம்,  வனவள பாதுகாப்பு திணைக்களம் விடுவிக்கவுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,

உள்ளூர் சமூகங்களுடன் முறையாக கலந்தாலோசிக்காமல், கூகிள் வரைபடத்தைப் பயன்படுத்தி வன பாதுகாப்பு திணைக்களம் எல்லைகளை குறித்ததால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

மக்களுக்குச் சொந்தமான பெரியளவு நிலங்கள் வனப் பகுதிகளாக தவறாக வரையறுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் அமைச்சு, மாகாண ஆளுநர்கள், வனப் பாதுகாப்பு திணைக்களம், மற்றும் காணி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் முதற்கட்ட கலந்துரையாடல்களை நடத்தினோம்.

இந்தக் கலந்துரையாடல்களின் போது, ​​வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள 250,000 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீண்டும் விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

காடுகள் பற்றிய எல்லைகள், அந்தந்த பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ், கிராம அலுவலர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்புடன், மீண்டும் வரையப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *