பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு.
பட்டலந்த வதைமுகாம்கள் தொடர்பான, குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதி செயலகம் இந்த அறிக்கையை, சட்டமா அதிபரின் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், சட்ட நடவடிக்கையைத் தொடர சிறிலங்கா ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த அறிக்கை தொடர்பான நாடாளுமன்றத்தில் ஒரு நாள் விவாதம் மட்டும் நடத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இன்னொரு நாள் விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாகவே சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.