ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் ஷானி அபேசேகர
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, மீளாய்வு செய்யும் குழுவில், மத்திய குற்ற விசாரணப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்தக் குழு சிறிலங்கா காவல்துறை மா அதிபரால் நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவில், மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் அம்பவில, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் முத்துமால, மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் கமல் பெரேரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பிரதான குழுவைத் தவிர, அறிக்கையை ஆய்வு செய்ய காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி காவல்துறை கண்காணிப்பாளர்கள் அடங்கிய ஐந்து துணைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.