வரிப் பிரச்சினை குறித்து சிறிலங்காவும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை
பரஸ்பர வரிப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து சிறிலங்காவும் அமெரிக்காவும் கூட்டாக அறிக்கை வெளியிட உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வொஷிங்டன், சென்றுள்ள சிறிலங்கா குழுவிற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையிலான பரஸ்பர வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் பலனளித்ததாக அனுரகுமார திசநாயக்க கூறினார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக பிரதி நிதியமைச்சர் தனக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். வரவிருக்கும் கூட்டு அறிக்கை முடிவுகள் குறித்து தெளிவுபடுத்தும் என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் பிரதி நிதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமெரிக்காவிற்கான சிறிலங்கா தூதுவர் ஆகியோர் அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.