மேலும்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயலாளர் நாயகமாக மூத்த இந்திய அதிகாரி

கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave) அமைப்பின் முதலாவது, செயலாளர் நாயகமாக, ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவரை இந்தியா நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் கோகலே சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ​இதுபோன்ற நியமனம் குறித்து புதுடெல்லியில் இருந்து கொழும்புக்கு இன்னும் எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்காவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார்.

கொழும்பை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா, சிறிலங்கா, மாலைத்தீவு ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு அமைப்பு 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து, இந்த அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

கடல்சார் பாதுகாப்பு விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கடந்த ஆண்டு மேலும் சில நாடுகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *