10 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட சீனா
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் 10 முன்னணி நாடுகளின் வரிசையில் இருந்து. 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனா முதல் முறையாக வெளியேற்றப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் 10 முன்னணி நாடுகளின் வரிசையில் இருந்து. 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனா முதல் முறையாக வெளியேற்றப்பட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டொலர் வரை கடனைப் பெற்றுக் கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னர் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாக பணியாற்றிய அனுராக் சிறிவஸ்தவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளார்.
பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
போரினால் சிதைந்த வடக்கு மாகாணத்திற்கு அதிக முதலீடுகள், ஒழுக்கமான வேலை நிலைமைகள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் தேவைப்படுவதாக, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) தெரிவித்துள்ளது.
மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி வரும் பொதுத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில், மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை, பிடியாணை பெற்று கைது செய்யுமாறு, சிறிலங்கா காவல்துறைக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருப்பதாக வெளியான செய்திகளை, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மறுத்துள்ளார்.
சிறிலங்காவின் நிலவரங்கள் குறித்து, ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் கவலை வெளியிட்டுள்ளார்.