மேலும்

மொட்டு சின்னத்திலேயே போட்டி – பொதுஜன பெரமுன அறிவிப்பு

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி வரும் பொதுத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில், மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணையத்துக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலர் சாகர காரியவசம், இந்த தகவலை நேற்று தேர்தல்கள் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் பெயரிலேயே பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வந்தது.

எனினும், பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், விடாப்பிடியாக தமது கட்சி மற்றும் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததால், மொட்டு சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *