கோத்தாவை வெற்றிபெற வைக்க 850 பேர் அமெரிக்காவில் இருந்து வருகின்றனர்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து 850 இலங்கையர்களும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கொழும்பு வரவுள்ளனர்.
கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்காகவும், அவருக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடுவதற்காகவும், குறைந்தது 850 பேர் கொழும்பு வருவதற்கு விமானங்களில் ஆசனங்களைப் பதிவு செய்துள்ளதாக, அவர்களுக்கான பயணச்சீட்டுகளை விற்பனை செய்த பயண முகவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், லொஞ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.