மேலும்

கூட்டமைப்பின் நிலைப்பாடு வியாழன்று வெளிவரும்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் நாள் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பன வரும் 23 மற்றும் 24ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டங்களின் பின்னர், எந்த வேட்பாளரை ஆதரிப்பது அல்லது அதிபர் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், மூன்று கட்சிகளும், ஐந்து தமிழ்க் கட்சிகளின் அமைப்பில் இணைந்திருக்கின்றன.

எனவே, ஐந்து கட்சிகளும் இணைந்தே முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *