மேலும்

சிறிலங்கா தேர்தலை கண்காணிக்க 60 பேரை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியம், குறுகிய கால, மற்றும் நீண்டகால அடிப்படையில்  60 கண்காணிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு அணி சிறிலங்காவின் ஒன்பது மாகாணங்களிலும், 30 நீண்டகால கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தவுள்ளது.

தேர்தலுக்கு முந்திய நாட்களில் சிறிலங்கா வரும், மேலும் 30 பேர் கொண்ட குறுகிய கால கண்காணிப்பாளர்கள், நாடெங்கும், வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பான பணிகளைப் பார்வையிடுவார்கள்.

சிறிலங்காவில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களுக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் போர்த்துக்கல் நாட்டுப் பிரதிநிதியான மரிசா மாட்டிஸ்,  தலைமை தாங்குவார்.

டிமித்ரா இயானோ துணைத் தலைமை கண்காணிப்பாளராக செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *