மேலும்

நொவம்பர் 1ஆம் நாளில் இருந்தே சென்னை – பலாலி விமான சேவை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயணிகள் விமான சேவை வரும் நொவம்பர் 1ஆம் நாள் தொடக்கம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதையடுத்து, சென்னையில் இருந்து வரும், முதல் விமானம் இங்கு தரையிறங்கவுள்ளது.

எனினும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் சென்னை விமான நிலையத்துக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை, நொவம்பர் 1ஆம் நாளில் இருந்தே ஆரம்பமாகும் என்றும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர், தெரிவித்தார்.

முன்னதாக, வரும் 27ஆம் நாள் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *