மேலும்

யாழ்ப்பாண விமான நிலையம் உள்நுழைவு, புறப்படுகைத் தளமாக பிரகடனம்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்மலானை அனைத்துலக விமான நிலையங்களை, குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களின் கீழ், புறப்படுகை மற்றும் உள்நுழைவுக்கான புதிய தளங்களாக, சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் மூன்று புதிய உள்நுழைவு மற்றும் புறப்படுகைத்  தளங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கான பிரகடனம், உள்நாட்டு மற்றும் உள்விவகார மற்றும் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் சென்னையில் இருந்து விருந்தினர்களுடன் வரும் முதல் விமானம் இன்று காலை தரையிறங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *