மேலும்

பலாலி ஓடுபாதையை ஆய்வு செய்ய வருகிறது இந்திய நிபுணர் குழு

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை மறுநாள் பலாலிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர், விமானமே யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையிலேயே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையை ஆய்வு செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதியான அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய நிபுணர்களின் குழு நாளை மறுநாள் யாழ்ப்பாணம் வரவுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *