மேலும்

அதிபர் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.

ஏற்கனவே 33 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 9 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

நாளை காலை 9 மணி தொடக்கம் 11 மணிவரை வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது அமையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *