வியாங்கொட, தெனுவரவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு
கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் அல்லது அவர்களின் சட்டவாளர்கள் கோரினார் உரிய பாதுகாப்பை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் சம்பிக்க சிறிவர்த்தனவுக்கு, பதில் காவல்துறை மா அதிபர் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.