மேலும்

கோத்தாவின் குடியுரிமை வழக்கு – இன்று காலை மீண்டும் விசாரணை

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணை இன்று காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர், மேன்முறையீட்டு நீதிமன்றில் கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை அங்கீகரிப்பதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று முன்தினம் மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து நேற்று பிற்பகல் வரை வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாள் விசாரணைகள் ஆரம்பமாகின. நேற்றுமாலை 6.15 மணிவரை இந்த வழக்கின் விசாரணை இடம்பெற்றது.

இதையடுத்து இன்று காலை 9.30 மணி வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கும் இநச்த விசாரணையின் முடிவில் நீதியரசர்கள் குழு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *