மேலும்

இரு முன்னாள் அமைச்சர்கள் சஜித்துக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள், ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அதாவுட செனிவிரத்ன, முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க ஆகியோரே, சஜிஜத் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவர்கள், தமது முடிவை அறிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அதாவுட செனிவிரத்த அமைச்சராக பதவி வகித்தவர்.

ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சராக இருந்த டபிள்யூ.பி.ஏக்கநாயக்க கடந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தாவியிருந்தார்.

ஏற்கனவே, ஐதேகவில் இருந்து வெளியேறியிருந்த, நியோமல் பெரேரா, கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலர் மீண்டும் ஐதேகவுக்குத் திரும்பி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *