மேலும்

ஐ.நாவுடனான பேச்சுக்கள் சாதகமாக அமையும் – இராணுவத் தளபதி

ஐ.நா அமைதிப்படை விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் பேச்சுக்களில் சாதகமான முறையும் அமையும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஐ.நா அமைதிப்படையில் வெளிநாட்டுப் படைகளை, குறிப்பிட்ட காலத்துக்கு ஈடுபடுத்துவது வழக்கமான நடவடிக்கை தான்.

இதற்காக வெவ்வேறு நாடுகளின் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். தேவைப்படும் இடங்களில் அவர்கள் மீண்டும் நிறுத்தப்படுகின்றனர்.

இதுபோன்ற நிலைமையை நாங்கள் ஏற்கனவே ஹெய்டியிலும் சந்தித்திருக்கிறோம்.

அங்கிருந்த சிறிலங்கா படையினரை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்த ஐ.நா, இறுதியில் முழுமையாகவே நீக்கியிருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *