கோத்தாவின் குடியுரிமைக்கு எதிரான மனு – விசாரணை ஆரம்பம்
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை அங்கீகரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று காலை ஆரம்பமானது.
சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, பேராசியரியர் சந்திரகுப்த தெனுவர ஆகியோர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மனு, இன்று காலை மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,
இந்த விசாரணைகள் இன்றும் நாளையும் நடைபெறும் என்று ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகளின் முடிவில் நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கப்படும்.
கோத்தாபய ராஜபக்சவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தீர்ப்பாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,