மேலும்

அமெரிக்காவின் அரசியல், இராணுவ விவகாரங்களுக்கான உதவிச்செயலர் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ஆர்.கிளார்க் கூப்பர் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ஆர்.கிளார்க் கூப்பர், இறுதியாக சிறிலங்கா வரவுள்ளார்.

சிறிலங்காவில் அவர், அரசாங்க அதிகாரிகளையும், கொள்கை வகுப்பு நிபுணர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

இதன்போது, பாதுகாப்பு. அமைதி காப்பு. கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருள்களை அகற்றுவது, தீவிரவாத முறியடிப்பு, மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான ஏனைய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பு வரவுள்ள அமெரிக்காவின் முதலாவது உயர்மட்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *