உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அதுரலியே ரத்தன தேரர்
சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கண்டி- தலதா மாளிகைக்கு முன்பாக இன்று காலை தொடக்கம் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் அவர் இந்தப் போராட்டத்தில் குதித்தார்.
அவருக்கு ஆதரவாக பெருமளவு பௌத்த பிக்குகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.