மேலும்

சிறிலங்கா முழுவதும் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்காவில், நாடு முழுவதும் இன்றிரவு 9 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 4 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

எனினும், வடமேல் மாகாணத்தில் இன்று மாலை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பகா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் இன்று முன்னிரவில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பகா,மினுவாங்கொட, கணேமுல்ல, தொம்பே, கிரிந்திவெல, மல்வத்துகிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வியாங்கொட, வீரகுல,வெலிவேரிய, பலேவெல, யக்கல ஆகிய காவல்துறைப் பிரிவுகளில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *