வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்
சிறிலங்காவின் வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வட மேல் மாகாணத்தில் உள்ள புத்தளம், குருநாகல ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.