மேலும்

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்கள் மீது நேற்று இரவு கொண்டு வரப்பட்ட தற்காலிக தடை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரங்களை அடுத்து சமூக ஊடகங்களான முகநூல், வட்ஸ்அப், வைபர், இன்ராகிராம் உள்ளிட்டவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

எனினும், நீர்கொழும்பில் இன்று காலை ஊரடங்கு நீக்கப்பட்டு, அங்கு சுமுக நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *