மேலும்

சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான, தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திடுவதற்கான கடைசி நாள் கடந்த வெள்ளிக்கிழமையாகும்.

இந்தக் காலஅவகாசத்துக்குள்,  மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

கோஸ்டாரிக்கா, சைப்ரஸ், எஸ்தோனியா, பிரான்ஸ், இஸ்ரேல், லத்வியா, லிச்ரென்ஸ்ரெய்ன், லித்வேனியா, மாலைதீவு, போர்துகல், தென்கொரியா, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து, ஹங்கேரி, ஜப்பான், ஸ்பெய்ன் ஆகிய 16 நாடுகளுமே, இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.

ஏற்கனவே இந்த தீர்மானத்துக்கு அனுசரணை மற்றும் இணை அனுசரணை வழங்கி, அல்பேனியா, அவுஸ்ரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோசியா, செக்கியா, டென்டார்க், பின்லாந்து, ஜோர்ஜியா, ஜேர்மனி, கிறீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பேர்க், மால்டா, மொன்ரெனிக்ரோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, வடக்கு மசிடோனியா, நோர்வே, போலந்து, ருமேனியா, சான் மரினோ, சிறிலங்கா, ஸ்லோவாக்கியா,  சுவீடன், பிரித்தானியா ஆகிய 30 நாடுகள் கையெழுத்திட்டிருந்தன.

புதிதாக 16 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளதை அடுத்து, அனுசரணை மற்றும் இணை அனுசரணை வழங்கியுள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை 46 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *