மேலும்

இன்று கொழும்பு வருகிறார் இந்திய பாதுகாப்புச் செயலர்

இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா, சிறிலங்காவுக்கான இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு வரவுள்ளார்.

கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவே இந்திய பாதுகாப்புச் செயலர் கொழும்பு வரவுள்ளார்.

இரண்டு நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது அவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன், பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களையும் இந்திய பாதுகாப்புச் செயலர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இரண்டு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள், குறித்தும், பாதுகாப்புச் செயலர்கள் மட்டத்தில் நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா கண்டி மற்றும் அனுராதபுர ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *