மேலும்

சித்திரைப் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு பறக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கள- தமிழ் புத்தாண்டு விடுமுறையை தமது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளிநாடு ஒன்றுக்குப் பயணமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்ட பயணமாகவே சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

யாத்திரைப் பயணமாகவும் மேற்கொள்ளப்படவுள்ள இந்தப் பயணம் குறித்து தகவல் வெளியிட்ட அந்த வட்டாரங்கள், எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவலை வெளியிட மறுத்துள்ளன.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறைக்காலத்திலும் சிறிலங்கா அதிபர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *