மேலும்

இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இயக்க அமைச்சரவை பச்சைக்கொடி

இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து, மத்தல அனைத்துலக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து செயற்படுத்துவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முறைப்படியான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கே, சி்றிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இயக்குவதற்காக இந்திய விமான நிலைய அதிகார சபை முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்தல் என்ற தலைப்பிலான, அமைச்சரவைப் பத்திரம் கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

இதற்கமைய,  அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுக்களை நடத்துவதற்கான குழு,  சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில், இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் முறைப்படியான பேச்சுக்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடு இறுதி செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *