மேலும்

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின் திட்டங்கள் – கண்வைக்கும் சீனா

சிறிலங்காவின் மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு, திரவ எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் மின்சக்தி மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்த சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் எரிவாயு மின்நிலையங்களை அமைப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அம்பாந்தோட்டையில் எரிவாயு மின்நிலையம் ஒன்றை சீனாவின் உதவியுடன் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், சீனாவின் பிரதான மின் நிலையங்களைப் பார்வையிடுவதற்கு அங்கு பயணம் மேற்கொள்ளுமாறும் சிறிலங்கா அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு சீனத் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *