காலியில் இந்திய ஆய்வுக் கப்பல்
சமுத்திரவியல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு, இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் ஜமுனா நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிறிலங்கா கடற்பரப்பில் சமுத்திரவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இந்த ஆய்வுக்கப்பல் கடந்த ஆண்டு டிசெம்பர் 20ஆம் நாள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
கொழும்பு தொடக்கம் காலி வரையான கடற்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், இந்தக் கப்பல் நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை அடைந்தது.
இதையடுத்து, சிறிலங்கா- இந்திய கடற்படை அதிகாரிகள் காலி கடற்படைத் தளத்தில், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.