மேலும்

சுமந்திரன் எப்போது தலைவரானார்? – கேள்வி எழுப்பிய விக்னேஸ்வரன்

கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“உங்களுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

“சந்திப்பு எனக்கும் சம்பந்தனுக்கும் இடையில் தான் நடக்கவிருந்ததே தவிர, எனக்கும் எனது மாணவனுக்கும் (சுமந்திரன்) அல்ல. சம்பந்தன் வெளிநாடு செல்லவுள்ளதால், சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.

அதையடுத்து, “முரண்பாடுகளைத் தீர்க்க சுமந்திரனை ஏன் சந்திக்கக் கூடாது?” என்று முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், சுமந்திரன் எப்போது கூட்டமைப்பின் தலைவரானார் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *