மேலும்

திருகோணமலை வந்தது அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அங்கரேஜ் ஐந்து நாட்கள் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஈரூடக தரையிறக்க போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் அங்கரேஜில்,  அமெரிக்க கடற்படையினர் மற்றும் அமெரிக்க மரைன்  படைப்பிரிவின் 13 ஆவது அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த படையினரும் திருகோணமலை வந்துள்ளனர்.

208 மீற்றர் நீளமான இந்தக் கப்பலில் உள்ள  34 அதிகாரிகளும் 900 படையினரும், திருகோணமலையில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையின் மரைன் படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *