ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக மிக்சேல் பசெலெட் நியமனம்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக சிலியின் முன்னாள் அதிபர் மிக்சேல் பசெலெட் அம்மையார் செப்ரெம்பர் 1 ஆம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையினால் நேற்று முன்தினம் அவர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக தெரிவு செய்யப்பட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தனது ஒரு பதவிக்காலத்தை நிறைவு செய்து, எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் நாளுடன் பதவியில் இருந்து விலகுகிறார்.
அவருக்குப் பதிலாகவே, மிக்சேல் பசெலெட், நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1993ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவி உருவாக்கப்பட்ட பின்னர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் ஏழாவது ஆணையாளராவார்.