மேலும்

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் இல்லை – கைவிரித்தார் சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவரைத் தன்னால் மாற்ற முடியாது என்றும் அதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் தெரிவித்தார்.

முன்னதாக, இரா.சம்பந்தனிடம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியினர் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *