மேலும்

20 ஆவது திருத்தச்சட்ட பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கான முன்மொழிவுகள் அடங்கிய பிரேரணையை ஜேவிபி இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், இந்தப் பிரேரணையை  ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க இன்று முற்பகல் 11.15 மணியளவில் சமர்ப்பித்தார்.

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை இல்லாதொழிக்கும் வகையில், இந்த 20 ஆவது திருத்தச்சட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *