மேலும்

சிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று பிற்பகல் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக, தெற்காசியப் பிராந்திய விவகாரம் மற்றும் பொருளாதார கேந்திரமாக அது வளர்ச்சி பெற்று வருவது குறித்தும் இருவரும் ஆராய்ந்தனர்.

இந்தச் சந்திப்பில் இந்திய இராணுவத் தளபதியுடன் சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *