மேலும்

ஈரானிய அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

ஈரானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கும், ஈரானிய அதிபருக்கு இடையிலான சந்திப்புக்கு முன்னர், ஈரானிய ஆயுதப் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களில் முக்கியமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *